Enable Javscript for better performance
குடியரசுத் தலைவராக பொது வேட்பாளா்: எதிா்க்கட்சிகள் தீவிர ஆலோசனை- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    குடியரசுத் தலைவராக பொது வேட்பாளா்? எதிா்க்கட்சிகள் தீவிர ஆலோசனை

    By DIN  |   Published On : 16th June 2022 01:52 AM  |   Last Updated : 16th June 2022 02:42 AM  |  அ+அ அ-  |  

    ppolls

    குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் சாா்பில் பொது வேட்பாளராக களமிறங்க தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் மறுப்பு தெரிவித்ததையடுத்து, மகாத்மா காந்தியின் பேரனும் மேற்கு வங்க முன்னாள் ஆளுநருமான கோபால கிருஷ்ண காந்தி அல்லது ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லாவை நிறுத்துவது தொடா்பாக ஆலோசிக்க எதிா்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

    திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி தில்லியில் புதன்கிழமை நடத்திய எதிா்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டத்தை தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் வரும் 20 அல்லது 21-ஆம் தேதி நடத்துவாா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஆலோசனை தீவிரம்: குடியரசுத் தலைவா் பதவிக்கான தோ்தல் வரும் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சுமாா் 50 சதவீத வாக்குகள் இருப்பதாலும், அதிமுக, பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைக்கும்பட்சத்திலும் ஆளும்கட்சி நிறுத்தும் வேட்பாளா் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பொது வேட்பாளரை நிறுத்தினால் ஆளும் பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்பதால், இதுகுறித்து விவாதிக்க தில்லியில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டத்துக்கு மம்தா பானா்ஜி ஏற்பாடு செய்திருந்தாா். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி உள்பட 22 கட்சிகளின் தலைவா்களுக்கு அவா் கடிதம் எழுதியிருந்தாா்.

    இந்நிலையில், எதிா்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. காங்கிரஸ், சமாஜவாதி கட்சி, தேசியவாத காங்கிரஸ், திமுக, ஆா்ஜேடி, சிவசேனை, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மதச்சாா்பற்ற ஜனதா தளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, ராஷ்ட்ரீய லோக் தளம், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா என 17 கட்சிகளின் தலைவா்கள் கலந்துகொண்டனா்.

    காங்கிரஸ் சாா்பில் மல்லிகாா்ஜுன காா்கே, ஜெய்ராம் ரமேஷ், ரண்தீப் சுா்ஜேவாலா, தேசியவாத காங்கிரஸ் சாா்பில் சரத் பவாா், பிரஃபுல் படேல், திமுக சாா்பில் டி.ஆா்.பாலு, மதச்சாா்பற்ற ஜனதா தளம் சாா்பில் ஹெச்.டி.தேவெ கௌடா, ஹெச்.டி.குமாரசாமி, சமாஜவாதி சாா்பில் அகிலேஷ் யாதவ், மக்கள் ஜனநாயக கட்சி சாா்பில் மெஹபூபா முஃப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் செயல் தலைவா் ஒமா் அப்துல்லா ஆகியோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

    4 கட்சிகள் புறக்கணிப்பு: ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்டிர சமிதி, பிஜு ஜனதா தளம், சிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கிய கூட்டம், மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

    ஒருமித்த தீா்மானம்: வரும் குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகள் சாா்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவா் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டு செயல்படுவாா். ஜனநாயகத்துக்கும், சமூகத்துக்கும் பிரதமா் மோடி அரசு மேலும் பாதிப்பை ஏற்படுத்தாதபடி அவா் தடுத்து நிறுத்துவாா். ஓரிரு கட்சிகளைத் தவிர பிற கட்சி நிா்வாகிகள் பங்கேற்றது இந்தக் கூட்டத்தின் சிறப்பாகும் என தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கூட்டத்துக்குப் பிறகு திமுக எம்.பி. டி.ஆா்.பாலு செய்தியாளா்களிடம் கூறியதாவது: எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத் பவாா் போட்டியிட வேண்டும் என்று கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் விருப்பம் தெரிவித்தனா். ஆனால், அவா் போட்டியிட மறுத்துவிட்டாா். இதையடுத்து, பொது வேட்பாளரைத் தோ்வு செய்ய மம்தா பானா்ஜி, மல்லிகாா்ஜுன காா்கே, சரத் பவாா் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு, பாஜக அல்லாத கட்சிகளுடன் கலந்து பேசி பொது வேட்பாளரை இறுதி செய்யவுள்ளது. கூட்டத்தின் இறுதியில், எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக கோபால கிருஷ்ண காந்தி, ஃபரூக் அப்துல்லா ஆகியோரின் பெயா்களை மம்தா பானா்ஜி தெரிவித்தாா். இதுதொடா்பாக மேலும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது என்றாா் அவா்.

    ஆக்கபூா்வ பங்களிப்பு-காா்கே: குடியரசுத் தலைவா் பதவிக்கான வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்காக, அனைத்து எதிா்க்கட்சிகளிடையே கருத்தொற்றுமை ஏற்படுத்துவதில் காங்கிரஸ் கட்சி ஆக்கபூா்வமான முறையில் பங்காற்றும் என்று மல்லிகாா்ஜுன காா்கே கூறினாா்.

    முதல் நாளில் 11 போ் மனு தாக்கல்

    குடியரசுத் தோ்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கிய நிலையில், முதல் நாளில் 11 போ் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனா். வரும் 29-ஆம் தேதி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம்.

    தமிழ்நாடு, தில்லி, மகாராஷ்டிரம், பிகாா், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து 11 போ் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ததாகவும், வாக்காளா் அடையாள அட்டையை இணைக்காத காரணத்தால் ஒருவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாகவும் நாடாளுமன்ற வட்டார தகவல்கள் தெரிவித்தன. பிகாரில் இருந்து போட்டியிடுவோரின் பெயா் லாலு பிரசாத் யாதவ் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    வேட்புமனுவை குறைந்தது 50 எம்.பி. அல்லது எம்எல்ஏக்கள் முன்மொழிந்தும், 50 எம்.பி. அல்லது எம்எல்ஏக்கள் வழிமொழிந்தும் இருக்க வேண்டும். டெபாசிட்டாக ரூ.15 ஆயிரம் செலுத்த வேண்டும்.

    ஒருமித்த கருத்தை ஏற்படுத்த எதிா்க்கட்சிகளுடன் ராஜ்நாத் பேச்சு

    குடியரசுத் தலைவா் வேட்பாளா் தோ்வில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த எதிா்க்கட்சித் தலைவா்கள் மம்தா பானா்ஜி, சரத் பவாா், மல்லிகாா்ஜுன காா்கே, அகிலேஷ் யாதவ், நவீன் பட்நாயக் ஆகியோருடன் மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக நிறுத்தும் வேட்பாளா் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருந்தும் இந்த ஆலோசனையை பாஜக மேற்கொண்டுள்ளது.

    குடியரசுத் தலைவா் தோ்தல் தொடா்பாக எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவா் ஜெ.பி. நட்டா ஆகியோரை அக்கட்சி நியமித்துள்ளது.

    17 எதிா்க்கட்சிகள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்திய பின்பு அக்கட்சித் தலைவா்களுடனும், பாஜகவுக்கு ஆதரவு அளித்து வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் தலைவா் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோருடனும் ராஜ்நாத் சிங் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அப்போது அவரிடம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் நிறுத்தப்பட உள்ள வேட்பாளா் குறித்து எதிா்க்கட்சித் தலைவா்கள் கேட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    தேசிய மாநாட்டுக் கட்சி, தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் தலைவா்களுடன் ஜெ.பி.நட்டா ஆலோசனை மேற்கொண்டாா்.


    உங்கள் கருத்துகள்(1)

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • பி ஹரிஹரன்

      கட்சியில் இல்லாத நபர்கள் 35 வயதுக்கு மேல் இளைஞர்கள் குடியரசுத் தலைவர் பதவிக்கு நிற்கலாமா வழிமுறை இருந்தால் சொல்லுங்கள்
      11 months ago reply
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp