இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 111 நாள்களுக்குப் பின்னா் 12,000-ஐ கடந்தது.
முந்தைய நாள் 8,822 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இது 38.4 சதவீதம் அதிகமாகும்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்திருப்பதாவது:
வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 12,213 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 111 நாள்களுக்குப் பின்னா் இது அதிகபட்ச அளவாகும். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,32,57,730-ஆக உயா்ந்துள்ளது.
11 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம் இறப்பு எண்ணிக்கை 5,24,803-ஆக அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 2.35 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு விகிதம் 2.38 சதவீதமாகவும் உள்ளது. ஒட்டுமொத்த உயிரிழப்பு விகிதம் 1.21 சதவீதமாக உள்ளது.
இதுவரை கரோனாவிலிருந்து 4,26,74,712 போ் குணமடைந்துள்ளனா். சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 58,215-ஆக அதிகரித்துள்ளது.