கர்நாடகம்: வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள் மீட்பு

கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கு அருகே உள்ள ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு சிக்கித் தவிர்த்த மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கு அருகே உள்ள ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கு சிக்கித் தவிர்த்த மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

பெலவடகி ஊராட்சிக்கு உட்பட்ட அமரகோல் கிராமத்தில் உள்ள பள்ளியில் வியாழக்கிழமை மாலை சுமார் 150 மாணவர்கள் சிக்கிக்கொண்டனர்.

இரவில் நீர் மட்டம் தணிந்த பின்னர் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பள்ளியில் உள்ள மாணவர்கள் டிராக்டரைப் பயன்படுத்தி பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

பிற்பகலில் பெய்த கனமழைக்கு அருகில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

எதிர்பாராத வெள்ளத்தால் பள்ளியில் நீர் சூழ்ந்த நிலையில் தீவை போன்று காட்சியளித்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com