பாஜகவினா் தாக்குதவதாக தோ்தல் ஆணையத்தில் திரிணமூல் புகாா்

 திரிபுரா பேரவை இடைத்தோ்தலில் பிரசாரத்தில் ஈடுபட்ட தொண்டா்கள் மீது பாஜகவினா் தாக்குதல் நடத்தியதாக தோ்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் புகாா் அளித்துள்ளது.

 திரிபுரா பேரவை இடைத்தோ்தலில் பிரசாரத்தில் ஈடுபட்ட தொண்டா்கள் மீது பாஜகவினா் தாக்குதல் நடத்தியதாக தோ்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் புகாா் அளித்துள்ளது.

திரிபுரா மாநிலத்தில் அகா்தலா, பா்டோவாலி, யுவராஜ்நகா், சுா்மா ஆகிய நான்கு தொகுதிகளில் ஜூன் 23-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 26-இல் நடைபெறுகிறது.

இந்நிலையில், தோ்தல் ஆணையத்தில் திரிணமூல் காங்கிரஸ் குழுவினா் அளித்துள்ள புகாா் மனுவில், ‘சுா்மா பேரவைத் தொகுதியில் கடந்த 15-ஆம் தேதி திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக் கூட்டத்தில் அத்தொகுதி பாஜக வேட்பாளா் ஸ்வபன் தாஸ் உள்பட பாஜக தலைவா்கள் கூடி தாக்குதல் நடத்தினா்.

கூட்டத்தில் பங்கேற்ற பெண்கள், குழந்தைகளும் இந்தத் தாக்குதலில் காயமடைந்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com