ஜி7 மாநாட்டில் பங்கேற்க விரைவில் பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி செல்ல உள்ளார்.
ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் அழைப்பின் பேரில் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி விரைவில் ஜெர்மனி செல்கிறார்.
ஜுன் 26, 27 தேதிகளில் நடக்கும் மாநாட்டில் சுற்றுச்சூழல், பருவநிலை, எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, பாலின சமத்துவம், குடியரசு மற்றும் சர்வதேச உறவு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என இந்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
இம்மாநாட்டில் பங்கேற்க அர்ஜெண்டினா, இந்தோனேசியா, செனகல் மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணத்தை முடித்தபின் ஜுன் 28 ஆம் தேதி பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளார். அங்கு மறைந்த அதிபா் ஷேக் காலிஃபா பின் சயீது அல் நயான் மறைவுக்கு தனிப்பட்ட முறையில் துக்கம் அனுசரிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.