முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாக இருப்போம் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஜெயந்த் பட்டீல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இணைந்த 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் சிவசேனை சட்டப்பேரவைக் குழுத் தலைவரும் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தனக்கு ஆதரவளித்த 42 எம்எல்ஏக்களுடன் அசாம் மாநிலத்தில் உள்ள குவஹாட்டியில் முகாமிட்டுள்ளார்.
சிவசேனை மற்றும் சுயட்சை எம்எல்ஏக்களான இந்த 42 பேரும் அங்குள்ள ரேடிசன் ஃப்ளூ விடுதியில் தங்கியுள்ளதால் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க: 42 எம்.எல்.ஏ.க்களுடன் விடியோ வெளியிட்ட ஏக்நாத் ஷிண்டே
இந்நிலையில், அம்மாநில அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜெயந்த் பட்டீல் “மகாராஷ்டிர விகாஸ் அகாடி என்பது மகாராஷ்டிரத்தின் வளர்ச்சி மற்றும் நலனுக்காக நிறுவப்பட்ட அரசு. கடைசி வரை உத்தவ் தாக்கரேவுடன் உறுதியாக நிற்போம்" எனத் தெரிவித்துள்ளார்.