காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சுமேட்டூரிலிருந்து காவிரி நீர் கல்லணை வந்தது! நாளை காலை திறப்பு!நேபாள பெருவெள்ளம்! தஞ்சையில் மரபணு சேகரிப்பு பணி தொடக்கம்!!தவெக ஆதரவு கட்சிகள் கூட்டம்: காங்கிரஸுக்கு நேரில் அழைப்பு விடுத்த அமைச்சர்கள்!உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

பெங்களூருவிலிருந்து மோடி கிளம்புவதற்குள் சாலையிலிருந்து தார் போய்விட்டதா? அதிரும் அதிகாரிகள்!

அவர் பயணித்த சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகள் அனைத்தும் ஒரு வாரத்துக்குள் மாயமாய் மறைந்துவிட்டதன் மாயத்தை அதிகாரிகள் அலசி ஆராய்ந்து வருகிறார்கள்.

பெங்களூருவிலிருந்து மோடி கிளம்புவதற்குள் சாலையிலிருந்து தார் போய்விட்டதா? அதிரும் அதிகாரிகள்!

Published On :1 பிப்ரவரி 2024, 3:07 pm IST


பெங்களூரு: பெங்களூருவுக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில், அவர் பயணித்த சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணிகள் அனைத்தும் ஒரு வாரத்துக்குள் மாயமாய் மறைந்துவிட்டதன் மாயத்தை அதிகாரிகள் அலசி ஆராய்ந்து வருகிறார்கள்.

பெங்களூருவிலிருந்து பிரதமர் மோடி கிளம்புவதற்குள், சாலைகளில் போடப்பட்ட தார் கரைந்துபோய்விட்டதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

பொதுவாக, சீரமைக்கப்படாத சாலைகளில், மழைக்காலங்களில் மோசமடைவது வழக்கம்தான் என்று பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால், சீரமைக்கப்பட்ட சாலைகளில் மோசமடைந்திருப்பது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் பெங்களூரு வந்திருந்தார். அவரது வருகையை முன்னிட்டு, முக்கிய சாலைகளில் தார் போடப்பட்டு வெள்ளைக் கோடுகள் போடப்பட்டன. சில சாலைகளில் பள்ளம், மேடுகள் தார்களைக் கொண்டு நிரப்பி சீரமைக்கப்பட்டன. இவையாவும் கடந்த வாரம் பெய்த மழையால் காணாமல் போய்விட்டன.

இந்த சாலை சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மட்டும் பெங்களூரு மாநகராட்சி 23.5 கோடி ரூபாயை செலவிட்டது என்கிறார் சிறப்பு ஆணையர் ரவீந்திரா.

கெங்கேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை மற்றும் சில காரணங்களால் சாலை சீரமைப்புகள் மிக துரித கதியில் நடைபெற்றன. அதனால்தான், மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது.

மழை பெய்ததில், பல சாலைகளில் மீண்டும் குண்டும் குழியுமாகிவிட்டது. இது குறித்து ஒப்பந்ததாரர்களிடம் அறிவுறுத்தப்படும் என்கிறார்கள் அதிகாரிகள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.