பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

இரண்டுபட்டிருக்கும் அதிமுக: மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சசிகலா

இரட்டைத் தலைமை வேண்டாம், ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற முழக்கத்துடன் அதிமுக இரண்டுபட்டிருக்கும் நிலையில், மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறார் வி.கே. சசிகலா.

News image

சசிகலா(கோப்புப்படம்)

Updated On :24 ஜூன் 2022, 4:27 pm IST


இரட்டைத் தலைமை வேண்டாம், ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற முழக்கத்துடன் அதிமுக இரண்டுபட்டிருக்கும் நிலையில், மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறார் வி.கே. சசிகலா.

சரியாக ஒரு மாதத்துக்கு முன்பு, மே 25ஆம் தேதி, செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, தான் மீண்டும் அரசியலுக்கு வருவேன் என்று கூறியிருந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று நான்காண்டு காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வெளியே வந்தபோது, தான் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவது போல கூறியிருந்த கருத்தை மாற்றிக் கொண்டிருந்தார்.

அதாவது, தமிழகத்தில் அதிமுக சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என்றும், விரைவில் அதிமுகவில் அம்மா ஆட்சி வரும் என்றும் குறிப்பிட்டிருந்தார். 

இதற்கிடையே, அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை வலுத்துவரும் நிலையில், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டு, தற்போது ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தின் கதவுகளை தட்டியுள்ளார்.

அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதி ஒற்றைத் தலைமைப் போர் மூண்டிருக்கும் நிலையில், அதற்கடுத்த நாளே சென்னையைச் சுற்றிலும் ஜூன் 26ஆம் தேதி மறுமலர்ச்சிப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக சசிகலா அறிவித்துள்ளார். 

தமிழ் மண் மற்றும் பெண்களின் மரியாதை காப்போம் என்ற பெயரில் சசிகலா அறிவித்திருக்கும் இந்த சுற்றுப் பயணம், சாலைகளில் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது போல அமையலாம் என்று கூறப்படுகிறது. தலைநகர் சென்னையின் பல இடங்களில் மக்களை சந்தித்து சசிகலா உரையாற்றவும் வாய்ப்பிருக்கிறது. சென்னை, திநகரில் உள்ள தனது இல்லத்திலிருந்து ஜூன் 26ஆம் தேதி 12.30 மணிக்கு புறப்படும் சசிகலா, தி.நகர், கோயம்பேடு, பூவிருந்தமல்லி, திருத்தணி, கோரமங்கலா, ஆர்.கே. பேட்டை வழியாக பயணிக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.