Enable Javscript for better performance
Gujarat ATS team with detained Teesta Setalvad reached Crime Branch, Ahmedabad- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஆமதாபாத் குற்றப் பிரிவில் தீஸ்தா சீதல்வாட் (விடியோ)

    By DIN  |   Published On : 26th June 2022 09:15 AM  |   Last Updated : 26th June 2022 09:15 AM  |  அ+அ அ-  |  

    Gujarat ATS team with detained Teesta Setalvad reached Crime Branch, Ahmedabad

    கோப்புப்படம்


    குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல் துறையினரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஆமதாபாத்தில் உள்ள குற்றப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

    மகாராஷ்டிரத்தில் சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாட்டை குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

    குஜராத் மாநிலம் கோத்ராவில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட 64 பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்த மறுநாள், தீஸ்தா சீதல்வாட், முன்னாள் டிஜிபி ஆர்.பி. ஸ்ரீகுமார் ஆகியோர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

    கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராவில் கலவரம் நடந்தது. அதுதொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பிரதமர் மோடி (அப்போதைய குஜராத் முதல்வர்) உள்பட 64 பேர் விடுவிக்கப்பட்டனர். அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஜாகியா ஜாஃப்ரி என்பவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

    ஜாகியா ஜாஃப்ரியை சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட்டின் தன்னார்வ அமைப்பு ஆதரித்ததாகக் கூறப்படுகிறது. 

    இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலம் சான்டா க்ரூஸ் பகுதியில் வசித்து வந்த தீஸ்தா சீதல்வாட்டை குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

    கோத்ரா கலவரம் தொடர்பாக பொய்யான ஆதாரங்களை சிறப்புப் புலனாய்வுக் குழு மற்றும் விசாரணை ஆணையத்திடம் தீஸ்தா சீதல்வாட் வழங்கியதாக குஜராத் மாநிலம் ஆமதாபாத் காவல் நிலையத்தில் டி.பி. பராட் என்ற குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், தீஸ்தா சீதல்வாட் கைது செய்யப்பட்டார்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp