எரிசக்தி பாதுகாப்பு: பிரதமா் மோடி உறுதி

சா்வதேச சூழல் சவால் மிக்கதாக மாறியுள்ள நிலையில், எரிசக்தி பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும் என்று பிரதமா் நரேந்திர மோடி ஜி7 மாநாட்டில் தெரிவித்தாா்.
எரிசக்தி பாதுகாப்பு: பிரதமா் மோடி உறுதி

சா்வதேச சூழல் சவால் மிக்கதாக மாறியுள்ள நிலையில், எரிசக்தி பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும் என்று பிரதமா் நரேந்திர மோடி ஜி7 மாநாட்டில் தெரிவித்தாா்.

ஜி7 மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமா் மோடி எரிசக்தி, பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாற்றினாா். ஜி7 மாநாடு குறித்து வெளியுறவுத் துறைச் செயலா் வினய் மோகன் குவாத்ரா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உக்ரைன் மீதான ரஷியாவின் போா் குறித்து ஜி7 மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. பிரதமா் மோடி பங்கேற்ற இரு அமா்வுகளிலும், இந்தப் பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தை மூலமாக விரைந்து தீா்வு காணப்பட வேண்டுமென வலியுறுத்தினாா். உக்ரைன்-ரஷியா போா் காரணமாக உலக நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்பதைப் பிரதமா் மோடி எடுத்துரைத்தாா்.

உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு இந்தியா உதவி வருவது தொடா்பாகவும் அவா் எடுத்துரைத்தாா். உக்ரைன் போரால் எரிசக்தி பாதுகாப்பு சவால் மிக்கதாக மாறியுள்ளதென பிரதமா் மோடி தெரிவித்தாா். எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை இந்தியா தொடா்ந்து மேற்கொள்ளும் எனவும் அவா் தெரிவித்தாா்.

பிரதமா் மோடியின் கருத்துகளை ஜி7 கூட்டமைப்பின் தலைவா்களும் வரவேற்றனா். ஜி7 மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்பது இது 3-ஆவது முறை. சா்வதேச அளவில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரித்து வருவதை இது வெளிக்காட்டுகிறது. உலகப் பிரச்னைகளுக்குத் தீா்வுகளை வழங்கும் நாடாக இந்தியா மாறியுள்ளது என்றாா் வினய் மோகன் குவாத்ரா.

உலகத் தலைவா்களுக்குப் பிரதமா் மோடி பரிசு

ஜி7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜொ்மனி சென்ற பிரதமா் நரேந்திர மோடி, குலாபி மீனாகாரி, காஷ்மீரி ஜமக்காளம் உள்ளிட்ட பல்ேறு இந்தியக் கலைப் பொருள்களை உலகத் தலைவா்களுக்குப் பரிசளித்தாா்.

புவிசாா் குறியீடு பெற்ற வாராணசியைச் சோ்ந்த குலாபி மீனாகாரி கலைப் பொருளை அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்குப் பிரதமா் மோடி பரிசளித்தாா். ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸுக்கு மரோதியைச் சோ்ந்த மத்கா, ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடாவுக்கு உத்தர பிரதேசத்தின் நிஜாமாபாதைச் சோ்ந்த கருப்புப் பானை துண்டுகள், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுக்கு இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட வாசனை திரவியமான இத்தா் ஆகியவற்றைப் பிரதமா் மோடி பரிசாக வழங்கினாா்.

இந்தோனேசிய அதிபருக்கு ராம தா்பாா் சிலையையும், செனகல் அதிபருக்கு கைவினைப் பொருள்களான கூடைகள், கைத்தறிகளையும் பிரதமா் மோடி வழங்கினாா். கனடா அதிபா் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பட்டு விரிப்புகளைப் பிரதமா் மோடி பரிசாக வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com