ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர் புதன்கிழமை தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஸ்ரீநகரின் சனத் நகர் பகுதியில் 29 சிஆர்பிஎப் பட்டாலியனைச் சேர்ந்த காவலர் ஆன்ந்த் லால்(29). இவர் தனது சர்வீஸ் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்கொலை செய்துகொண்ட காரணம் குறித்து விசாரித்து வருகின்றன.