மக்கள் தொடர்பு வேலையை மட்டுமே பாஜக அரசு செய்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்பதில் எந்தவித நிலையான திட்டமும் பாஜக அரசிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, பணமதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள், சீன எல்லை ஆக்கிரமிப்பு என எதைப் பற்றியும் மோடி அரசு கவலைப்படுவதில்லை. ஆனால் மக்கள் தொடர்பு வேலையை மட்டுமே மத்திய அரசு செய்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.