நாளை (மார்ச்.10) வாக்கு எண்ணிக்கை: உபியில் மது விற்பனைக்குத் தடை

மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் உத்தரப்பிரதேசத்தில் ஒருநாள் மதுவிற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் உத்தரப்பிரதேசத்தில் ஒருநாள் மதுவிற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் நாளை வெளியாகின்றன. இதற்கான முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் முடிவுகளையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாதவண்ணம் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்காக மாநிலம் முழுவதும் 70 ஆயிரம் காவலர்களும், 245 துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளை மாநிலம் முழுவதும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com