தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நாளை (மார்ச்.10) வாக்கு எண்ணிக்கை: உபியில் மது விற்பனைக்குத் தடை

மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் உத்தரப்பிரதேசத்தில் ஒருநாள் மதுவிற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :9 மார்ச் 2022, 1:08 pm

DIN

மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் உத்தரப்பிரதேசத்தில் ஒருநாள் மதுவிற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முடிவுகள் நாளை வெளியாகின்றன. இதற்கான முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் முடிவுகளையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாதவண்ணம் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்காக மாநிலம் முழுவதும் 70 ஆயிரம் காவலர்களும், 245 துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளை மாநிலம் முழுவதும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநிலத் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.