தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மீிண்டும் முதல்வராகும் யோகி ஆதித்யநாத்: கோராக்பூர் தொகுதியில் வெற்றி

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோராக்பூரில் பாஜக சார்பில் போட்டியிட்ட யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

News image

யோகி ஆதித்யநாத்

Updated On :10 மார்ச் 2022, 11:24 am

DIN

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோராக்பூரில் பாஜக சார்பில் போட்டியிட்ட யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகி வருகின்றன. இதில் 4 மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் முன்னேறி வருகிறது.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் கோராக்பூர் தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதல்வரும், பாஜக தலைவருமான யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. யோகி ஆதித்யநாத் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாதி வேட்பாளர் சபாவதி சுக்லாவைக் காட்டிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கோராக்பூர் தொகுதியில் யோகி மொத்தம் 89,332 வாக்குகள் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ள நிலையில் சமாஜ்வாதி கட்சி எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.