கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'ஆம் ஆத்மிக்கு ஆதரவளிப்போம்' - சிரோமணி அகாலி தளம் தலைவர்

பஞ்சாபில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் ஆட்சி அமைக்கவிருக்கும் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிக்க இருப்பதாக சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :11 மார்ச் 2022, 10:39 am

DIN

பஞ்சாபில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் ஆட்சி அமைக்கவிருக்கும் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிக்க இருப்பதாக சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தெரிவித்துள்ளார். 

பஞ்சாபில் 117ல் 92 இடங்களைக் கைப்பற்றி மாநிலத்தில் முதல்முறையாக ஆட்சி அமைக்கிறது ஆம் ஆத்மி. அடுத்தபடியாக காங்கிரஸ் 18 தொகுதிகளில் வென்றுள்ளது.

சிரோமணி அகாலி தளம் 3 இடங்களில் வென்றுள்ளது. எனினும், கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், ஜலாலாபாத் தொகுதியில், ஆம் ஆத்மி வேட்பாளர் ஜெக்தீப் கம்போஜிடம் தோல்வியுற்றார். 

அதுபோன்று பஞ்சாப் மாநிலத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்தவரும் சிரோமணி அகாலி தளத் தலைவருமான பிரகாஷ் சிங் பாதலும், தான் போட்டியிட்ட லம்பி தொகுதியில் தோல்வியைத் தழுவினார். தலைவர்கள் இருவரும் தோல்வியுற்றது கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தோல்வி குறித்து சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், 'பஞ்சாபில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். தோல்வி குறித்து விவாதிக்க ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளோம். பஞ்சாபில் ஆட்சி அமைக்கவிருக்கும் ஆம் ஆத்மிக்கு ஆதரவளிப்போம்' என்று குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக நேற்று, 'பஞ்சாபியர்கள் வழங்கிய தீர்ப்பை நாங்கள் முழு மனதுடன் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். எங்கள் மீது நம்பிக்கை வைத்த லட்சக்கணக்கான பஞ்சாபிகளுக்கும், தன்னலமற்ற உழைக்கும்  ஊழியர்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். பணிவோடு அவர்களுக்கு தொடர்ந்து சேவை செய்வோம்' என்று குறிப்பிட்டிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.