மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பனிஹதி(Panihati) நகராட்சி 8 வது வார்டு கவுன்சிலர் அனுபம் தத்தா, பைக்கில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பராக்பூர் காவல் ஆணையர் சி.பி. மனோஜ் குமார் வர்மா தெரிவித்தார்.
கவுன்சிலரின் தலையில் துப்பாக்கி தோட்டா இருந்ததாகவும் மருத்துவமனை கொண்டு சென்ற வழியில் அவர் உயிரிழந்த்தாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்த மர்ம நபர்களைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.