பெங்களூருவில் இன்று காலை முதல் 21ஆம் தேதி 144 தடை உத்தரவு பிறப்பிறக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், பெங்களூருவில் பொதுவிடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கோ போராட்டங்கள் நடத்தவோ தடை விதிக்கப்படுகிறது.
ஹிஜாப் சர்ச்சை விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட 'பழைய சோறு': கிடைத்திருக்கும் நல்ல செய்தி
ஆயுதப் படை, அதிரடிப்படை உள்ளிட்ட காவல்துறையின் அனைத்துப் பிரிவினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு கன்னட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.