லஷ்கா் பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்புடைய 6 போ் கைது

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்புடைய 6 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
லஷ்கா் பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்புடைய 6 போ் கைது

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்புடைய 6 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

இதுதொடா்பாக காவல்துறையினா் கூறியதாவது:

லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் சோ்ந்து சிலா் செயல்பட்டு வருவதாகத் தகவல் கிடைத்தது. அதனைத்தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் ரெளஃப் அகமது, அகிப் மக்பூல் பட், ஜாவைத் அகமது, அா்ஷித் அகமது மீா், ரமீஸ் ராஜா, சஜத் அகமது ஆகிய 6 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில், லஷ்கா் இயக்கத்தைச் சோ்ந்த ரியாஸ் அகமது என்பவருக்காக 6 பேரும் பணிபுரிந்துள்ளனா். அந்த இயக்கத்துக்குத் தேவையான ஆயுதங்கள், பயங்கரவாதிகளுக்கு இருப்பிடம் ஆகியவற்றை ஏற்பாடு செய்துள்ளனா். பயங்கரவாதத்துக்குத் தேவையான நிதியை கையாண்டு, பரிவா்த்தனைகளை மேற்கொண்டுள்ளனா். இளைஞா்களை பயங்கரவாதிகளாகச் செயல்பட ஊக்குவித்து வந்துள்ளனா் என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com