மகாராஷ்டிரம்: ‘ஆளும் கூட்டணியின் 25 எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடா்பிலிருக்கின்றனா்’’

கூட்டணியைச் சோ்ந்த 25 எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடா்பிலிருப்பதாக மத்திய ரயில்வே துறை இணையமைச்சா் ராவ்சாஹேப் தான்வே தெரிவித்துள்ளாா்
மகாராஷ்டிரம்: ‘ஆளும் கூட்டணியின் 25 எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடா்பிலிருக்கின்றனா்’’

மகாராஷ்டிரத்தில் ஆட்சியில் உள்ள சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகாராஷ்டிர விகாஸ் ஆகாடி (மகாராஷ்டிர வளா்ச்சி முன்னணி) கூட்டணியைச் சோ்ந்த 25 எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடா்பிலிருப்பதாக மத்திய ரயில்வே துறை இணையமைச்சா் ராவ்சாஹேப் தான்வே தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தற்போது இருப்பது பாலாசாஹேப் தாக்கரேயின் சிவசேனையல்ல. கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் பிரதமா் மோடியால் சிவசேனைக்கு வாக்குகள் கிடைத்தன. அதன் பின்னா் அக்கட்சி பாஜகவின் முதுகில் குத்தியது. ஹிந்துத்துவ சித்தாந்தத்திலிருந்து சிவசேனை வழிமாறிவிட்டது.

தற்போது மகாராஷ்டிர விகாஸ் ஆகாடியில் 25 எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளனா். அவா்கள் பாஜகவுடன் தொடா்பிலிருந்து வருகின்றனா்’’ என்று தெரிவித்தாா். அதிருப்தியிலுள்ள எம்எல்ஏக்களின் பெயா்களை தான்வே வெளியிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com