ஐந்து மாநில தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் முதல்வர் பொறுப்பு யாருக்கு அளிக்கப்படும் என்பதில் தொடர் இழுபறி நீடித்துவருகிறது.
குறிப்பாக, மணிப்பூரில் காபந்து முதல்வர் பைரன் சிங்குக்கும் பிஸ்வஜித் சிங்குக்கும் கடும் போட்டி நிலவிவரும் நிலையில், மூன்றாவது நபராக ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவோடு போட்டியில் குதித்துள்ளார் யும்னம் கேம்சந்த் சிங். கடைசி சட்டப்பேரவையில் சபாநாயகராக பதவி வகித்த இவரை, பாஜக மேலிடம் நேற்று தில்லிக்கு அழைத்துள்ளது.
பைரன் சிங், பிஸ்வஜித் சிங் ஆகியோருக்கிடையே நிலவும் அதிகார போட்டியை தவிர்ப்பதற்காக ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் யும்னம் கேம்சந்த் சிங் போட்டியில் குதித்தாகக் கூறப்படுகிறது. இதற்கு மத்தியில், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ ஆகியோர் மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு இன்று சென்றுள்ளனர். முதல்வர் யார் என்பதை அவர்கள் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | ஓராண்டுக்கு பிறகு சீனாவில் கரோனா பலி
மணிப்பூரில் 32 தொகுதிகளை வென்று தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. தில்லியில் பாஜகவின் மூத்த தலைவர்களை சந்தித்த பைரன் சிங், பிஸ்வஜித் சிங் ஆகியோர் இன்று இம்பாலுக்கு திரும்பியுள்ளனர். இம்பாலுக்கு சென்ற மத்திய அமைச்சர்கள், உள்ளூர் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு முதல்வர் யார் என்பதை அறிவிப்பார்கள்.
முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்காத நிலையிலும் முதல்வர் பைரன் சிங் தலைமையில்தான் பாஜக தேர்தலை சந்தித்தது. பைரன் சிங்கை ஒப்பிடுகையில் பிஸ்வஜித் சிங் பாஜகவில் நீண்ட காலம் இருந்திருந்தாலும், கடந்த 2017 தேர்தலில் முதல்வராக பைரன் சிங்கே அறிவிக்கப்பட்டார்.
மணிப்பூரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்காவுக்காக பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும்! டிரம்ப் அறிவுறுத்தல்

தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை! இன்றைய நிலவரம்! (ஜூன் 30)

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2- வது நாள் மாநாடு தொடங்கியது!
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


