மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

வடகிழக்கில் ஏஎஃப்எஸ்பிஏ பகுதிகள் குறைப்பு: அமித் ஷா

நாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பு சட்டத்தின் வரம்புக்குள் வரும் பகுதிகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் குறைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (வியாழக்கிழமை) அறிவித்து

கோப்புப்படம்

Published On :


நாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பு சட்டத்தின் (ஏஎஃப்எஸ்பிஏ) வரம்புக்குள் வரும் பகுதிகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் குறைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான அமித் ஷாவின் ட்விட்டர் பதிவு:

"குறிப்பிடத்தக்க நகர்வாக நாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆயுதப் படை சிறப்புச் சட்டத்தின் வரம்புக்குள் வரும் பகுதிகளைக் குறைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது."

எனினும், மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விளக்கமளிக்கையில், ஆயுதப் படை சிறப்புச் சட்டம் மூன்று மாநிலங்களிலிருந்து முழுமையாக விலக்கப்படவில்லை என்றார்.

நாகாலாந்தில் ராணுவப் படையால் கடந்த டிசம்பரில் தவறுதலாக 14 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஆயுதப் படை சிறப்புச் சட்டத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக ஆராய உயர்நிலைக் குழுவை மத்திய அரசு நியமித்தது. இந்தக் குழு அமைக்கப்பட்டு மூன்று மாதங்களில் மத்திய அரசிடமிருந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.