சிறையில் அடைத்தால் பேரவையில் பேசமாட்டோமா? ஜாமீனில் விடுதலையான மார்க்கண்டேயன் கேள்விவைகோ புத்தகத்தை வெளியிட்ட ராகுல்! இந்தியா கூட்டணித் தலைவர்களுடன் தவெக அமைச்சர்!சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

வடகிழக்கில் ஏஎஃப்எஸ்பிஏ பகுதிகள் குறைப்பு: அமித் ஷா

நாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பு சட்டத்தின் வரம்புக்குள் வரும் பகுதிகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் குறைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (வியாழக்கிழமை) அறிவித்து

News image

கோப்புப்படம்

Updated On :1 பிப்ரவரி 2024, 2:20 pm IST


நாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூரில் ஆயுதப் படை சிறப்பு சட்டத்தின் (ஏஎஃப்எஸ்பிஏ) வரம்புக்குள் வரும் பகுதிகள் ஏப்ரல் 1-ம் தேதி முதல் குறைக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான அமித் ஷாவின் ட்விட்டர் பதிவு:

"குறிப்பிடத்தக்க நகர்வாக நாகாலாந்து, அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆயுதப் படை சிறப்புச் சட்டத்தின் வரம்புக்குள் வரும் பகுதிகளைக் குறைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது."

எனினும், மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் விளக்கமளிக்கையில், ஆயுதப் படை சிறப்புச் சட்டம் மூன்று மாநிலங்களிலிருந்து முழுமையாக விலக்கப்படவில்லை என்றார்.

நாகாலாந்தில் ராணுவப் படையால் கடந்த டிசம்பரில் தவறுதலாக 14 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஆயுதப் படை சிறப்புச் சட்டத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக ஆராய உயர்நிலைக் குழுவை மத்திய அரசு நியமித்தது. இந்தக் குழு அமைக்கப்பட்டு மூன்று மாதங்களில் மத்திய அரசிடமிருந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.