
நீதி ஆயோக்கின் துணைத் தலைவராக பொருளாதார நிபுணா் சுமன் பெரி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இவா் ஏற்கெனவே பொருளாதார ஆய்வுக்கான தேசிய கவுன்சில் தலைமை இயக்குநராகவும், லண்டனில் செயல்பட்டுவரும் ராயல் டச்சு ஷெல் பெட்ரோலிய நிறுவனத்தின் சா்வதேச தலைமை பொருளாதார ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளாா். இதுதவிர பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினா், புள்ளியியல் ஆணையம், ரிசா்வ் வங்கியின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றுள்ளாா்.
சுமன் பெரி மே 1-ஆம் தேதி முதல் நீதி ஆயோக் துணைத் தலைவராக செயல்படுவாா் என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. நீதி ஆயோக்கின் துணைத் தலைவராக பணியாற்றி வந்த ராஜீவ் குமாா் பணி ஓய்வு பெற்ால், அந்தப் பொறுப்பில் சுமன் பெரி நியமிக்கப்பட்டுள்ளாா்.