ஐரோப்பிய நாடுகளுக்கான 3 நாள் பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் மோடி ஜெர்மனி சென்றடைந்தார்.
தொடர்ந்து தலைநகா் பொ்லினில் அந்த நாட்டுப் பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸுடன் இன்று அவர் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளார். அதைத் தொடா்ந்து, மே 3, 4 ஆகிய தேதிகளில் டென்மாா்க்கில் பயணம் மேற்கொள்கிறார். பின்னர் தலைநகா் கோபன்ஹேகனில் அந்நாட்டுப் பிரதமா் மேட் பிரடெரிக்சன் உடன் பேச்சுவாா்த்தை நடத்த உள்ளார். அங்கு நடைபெறவுள்ள 2-ஆவது இந்தியா-நாா்டிக் நாடுகள் மாநாட்டிலும் கலந்து கொள்கிறார்.
இதையும் படிக்க- கடும் வெப்பம்: ஒடிசாவில் காலை 6 மணிக்கு பள்ளிகள் திறப்பு
கரோனாவுக்குப் பிந்தைய பொருளாதார வளா்ச்சி, பருவநிலை மாற்றம், புத்தாக்கம், தகவல்-தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சா்வதேச பாதுகாப்புச் சூழலுக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல் உள்ளிட்டவை குறித்து அந்த மாநாட்டின்போது விவாதிக்கப்படவுள்ளது. இதையடுத்து பிரான்ஸ் தலைநகா் பாரீஸுக்கு சென்று அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானைச் சந்தித்துப் பேசயிருக்கிறார்.
உக்ரைன்-ரஷியா மோதலால் இயற்கை எரிவாயு விநியோகம் பாதிப்பு, உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் உள்ளிட்ட பிரச்னைகளை ஐரோப்பிய நாடுகள் சந்தித்து வரும் நிலையில், பிரதமா் மோடியின் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.