திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சீனாவில் கட்டடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு

சீனாவின் சாங்ஷா நகரில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

News image
Updated On :6 மே 2022, 9:47 am

DIN

சீனாவின் சாங்ஷா நகரில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

கடந்த ஏப்ரல் 29-ம் தேதியன்று சாங்ஷாவில் உள்ள வாங்செங் மாவட்டத்தில் ஆறு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. 

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 10 பேரை மீட்புப் படையினர் உயிருடன் மீட்டனர்.

முன்னாதக, இறந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக இருந்தது, தற்போது, பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்து 53 ஆக உயர்ந்துள்ளது. 

சீன அதிகாரிகளின் கூற்றுப்படி, 

கட்டடம் எந்த அங்கீகாரமும் இல்லாமல் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது விபத்துக்கு முக்கிய காரணமாகும். 

இதுதொடர்பாக காவல்துறை அதிகாரிகள் ஒன்பது பேரை கைது செய்துள்ளனர், அவர்களில்  4 பேர் குற்றவியல் அலட்சியம், 5 பேர் போலி ஆவணங்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.