ஹசாரிபாக் (ஜார்கண்ட்): 20 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை செய்த குற்றத்திற்காக இருவரை ஹசாரிபாக் காவல் துறையினர் கைது செய்தனர்.
சனிக்கிழமை அந்த பெண்ணின் உறவினர்கள் அளித்த புகாரின் அடைப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விமல் குமார் (22) மற்றும் லால் பிரதாப்(20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்திய தண்டனைச் சட்டம் 376 (D), 302, 201, மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.