மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 7 ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்து வருகிறார்.
மாநிலங்களவை உறுப்பினராக, அவரது பதவிக்காலம் வருகிற ஜூன் 30 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்த மாதம் கர்நாடகத்தில் 5 இடங்களுக்கு மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறுவதையடுத்து அதில் ஒரு இடத்திற்கு நிர்மலா சீதாராமனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை பெங்களூருவில் நடைபெற்ற மாநில பாஜக குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கும் மாநிலங்களை உறுப்பினராக வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
முன்னதாக, நிர்மலா சீதாராமன் 2014 - 16ல் ஆந்திரத்தில் இருந்தும் அதன்பின்னர் 2016 முதல் கர்நாடகத்திலும் இருந்தும் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். மேலும் 2014-17ல் மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சராகவும், 2017-19 மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்த அவர், 2019 முதல் மத்திய நிதியமைச்சராக இருக்கிறார்.
இதையும் படிக்க | உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கப்படும்: நேட்டோ அறிவிப்பு