மதுக்கடை தாக்குதல் வழக்கில் 4 பயங்கரவாதிகள், ஒரு எல்இடி கூட்டாளி கைது

ஜம்மு-காஷ்மீரில் மதுபானக் கடை மீது கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 4 பயங்கரவாதிகள் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
மதுக்கடை தாக்குதல் வழக்கில் 4 பயங்கரவாதிகள், ஒரு எல்இடி கூட்டாளி கைது

ஜம்மு-காஷ்மீரில் மதுபானக் கடை மீது கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 4 பயங்கரவாதிகள் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சமீபத்தில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடை மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இந்த  வழக்கில் 4 பயங்கரவாதிகள் மற்றும் லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து 5 கைத்துப்பாக்கிகள் மற்றும் 23 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது என்று காஷ்மீர் காவல் கண்காணிப்பாளர் விஜய் குமார் டிவீட் செய்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை அன்று புர்கா அணிந்த பயங்கரவாதி மற்றும் அவனது கூட்டாளியால் நடத்தப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் மதுபானக்கடை ஊழியர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் மூவர் காயமடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com