
கோப்புப்படம்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,226 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 2,226 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,202 பேர் குணமடைந்துள்ளனர்.
65 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 4,25,97,003 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,413 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 14,955 பேர் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
கடந்த 24 மணி நேரத்தில் 14,37,381 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,92,28,66,524 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...