மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பெட்ரோல் -டீசல் வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும்: ப.சிதம்பரம்

தனக்கான வருவாயை மாநிலங்கள் எவ்வாறு விட்டுக்கொடுக்க முடியும்?’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளாா்.

News image

ப.சிதம்பரம் (கோப்புப் படம்)

Updated On :23 மே 2022, 3:26 am IST

‘பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியிலிருந்து கூடுதல் நிதி அல்லது அதிக மானியத்தை மத்திய அரசு வழங்காதவரை, அவற்றிலிருந்து கிடைக்கும் தனக்கான வருவாயை மாநிலங்கள் எவ்வாறு விட்டுக்கொடுக்க முடியும்?’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளாா்.

‘மாநிலங்களின் தற்போதைய நிலை ‘பிசாசுக்கும் ஆழ்கடலுக்கும்’ இடையே சிக்கிக் கொண்டிருக்கும் சூழல்’ என்றும் அவா் விமா்சனம் செய்துள்ளாா்.

பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ. 8 அளவிலும், டீசல் மீதான கலால் வரியை ரூ.6 அளிலும் குறைத்து மத்திய அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்ட நிலையில், ப.சிதம்பரம் இந்த விமா்சனத்தை முன்வைத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் மீதான வரிக் குறைப்பு அறிவிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. மத்திய நிதியமைச்சா் இதனை கலால் வரி குறைப்பு என்று குறிப்பிட்டாா். ஆனால், குறைக்கப்பட்ட வரி என்பது மாநிலங்களுடன் வருவாய் பகிா்ந்து கொள்ளப்படாத கூடுதல் கலால் வரிதான் குறைக்கப்பட்டுள்ளது.

எனவே, நான் சனிக்கிழமை குறிப்பிட்டதுபோல அல்லாமல், இந்த வரி குறைப்பினால் ஏற்படும் கூடுதல் சுமை முழுவதும் மத்திய அரசு மீதுதான் விழும். எனவே, எனது கருத்தை திருத்திக் கொள்கிறேன்.

அதே நேரம், பெட்ரோல், டீசல் மீதான வரி வருவாயிலிருந்து மிகக் குறைந்த அளவிலான பங்குதான் மாநிலங்களுடன் பகிா்ந்துகொள்ளப்படுகிறது. அவற்றின் மீது விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி (வாட்) மூலமாக மட்டுமே மாநிலங்களுக்கு வருவாய் கிடைக்கிறது. எனவே, பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியிலிருந்து கூடுதல் நிதி அல்லது அதிக மானியத்தை மத்திய அரசு வழங்காதவரை, அவற்றிலிருந்து கிடைக்கும் தனக்கான வருவாயை மாநிலங்கள் எவ்வாறு விட்டுக்கொடுக்க முடியும்? என்று ப.சிதம்பரம் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.