அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை தோண்டியெடுப்பு: ஆனால்?

ராம்பன் மருத்துவமனையில் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை மீண்டும் தோண்டியெடுக்கப்பட்ட நிலையில், சரியான மருத்துவ வசதியின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

News image
Updated On :25 மே 2022, 0:57 pm IST

ராம்பன் மருத்துவமனையில் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை மீண்டும் தோண்டியெடுக்கப்பட்ட நிலையில், சரியான மருத்துவ வசதியின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

ஜம்முவின் பனிஹாலில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனையில் திங்கள்கிழமை காலை பஷரத் அகமது குஜ்ஜார்- ஷமீமா பேகத்திற்கு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் நசீர் ஹுசைன் சௌத்ரி, குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் காலை 6.30 மணியளவில் இறந்ததாகத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து ஹாலன் கிராமத்தில் குழந்தையை அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்து, குழந்தையைப் புதைத்தனர். 

ஹாலன் கிராமத்தில் உள்ள உள்ளூர் மக்கள் தங்கள் கல்லறையில் அடக்கம் செய்வதை எதிர்த்த நிலையில், குடும்பத்தினர் கல்லறையைத் தோண்ட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். 

தோண்டியபோது குழந்தை மூச்சு விடுவதைக் கண்டவுடன், உடனே குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

குறைமாத குழந்தை, சுவாசக் கோளாறுடன் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தையை மருத்துவமனையில் ஐசியு பிரிவில் அனுமதித்தனர். ஆனால் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீநகர் மருத்துவமனை பரிந்துரைக்கப்பட்டது. 

ஆனால், ஸ்ரீ நகர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

இதுதொடர்பாக குடும்பத்தினர் மருத்துவமனையை முற்றுகையிட்டு, எதிர்ப்பு தெரிவித்தனர். 

பிறந்த குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டதாக தவறாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்முவில் உள்ள சுகாதார சேவைகள் இயக்குநரகம், செவ்வாய்க்கிழமை 4 பேர் கொண்ட குழுவை அமைத்து, பனிஹால் சமூக சுகாதார மையத்திற்கு எதிரான புகாரை விசாரித்தது. 

ஜம்முவின் உதவி இயக்குனர் சஞ்சய் துர்க்கி தலைமையிலான குழு 2 நாள்களுக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.