டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை தோண்டியெடுப்பு: ஆனால்?

ராம்பன் மருத்துவமனையில் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை மீண்டும் தோண்டியெடுக்கப்பட்ட நிலையில், சரியான மருத்துவ வசதியின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

News image
Updated On :25 மே 2022, 12:57 pm IST

ராம்பன் மருத்துவமனையில் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை மீண்டும் தோண்டியெடுக்கப்பட்ட நிலையில், சரியான மருத்துவ வசதியின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

ஜம்முவின் பனிஹாலில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனையில் திங்கள்கிழமை காலை பஷரத் அகமது குஜ்ஜார்- ஷமீமா பேகத்திற்கு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தைகள் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் நசீர் ஹுசைன் சௌத்ரி, குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் காலை 6.30 மணியளவில் இறந்ததாகத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து ஹாலன் கிராமத்தில் குழந்தையை அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்து, குழந்தையைப் புதைத்தனர். 

ஹாலன் கிராமத்தில் உள்ள உள்ளூர் மக்கள் தங்கள் கல்லறையில் அடக்கம் செய்வதை எதிர்த்த நிலையில், குடும்பத்தினர் கல்லறையைத் தோண்ட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். 

தோண்டியபோது குழந்தை மூச்சு விடுவதைக் கண்டவுடன், உடனே குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

குறைமாத குழந்தை, சுவாசக் கோளாறுடன் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தையை மருத்துவமனையில் ஐசியு பிரிவில் அனுமதித்தனர். ஆனால் மேல் சிகிச்சைக்காக ஸ்ரீநகர் மருத்துவமனை பரிந்துரைக்கப்பட்டது. 

ஆனால், ஸ்ரீ நகர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

இதுதொடர்பாக குடும்பத்தினர் மருத்துவமனையை முற்றுகையிட்டு, எதிர்ப்பு தெரிவித்தனர். 

பிறந்த குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டதாக தவறாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜம்முவில் உள்ள சுகாதார சேவைகள் இயக்குநரகம், செவ்வாய்க்கிழமை 4 பேர் கொண்ட குழுவை அமைத்து, பனிஹால் சமூக சுகாதார மையத்திற்கு எதிரான புகாரை விசாரித்தது. 

ஜம்முவின் உதவி இயக்குனர் சஞ்சய் துர்க்கி தலைமையிலான குழு 2 நாள்களுக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.