மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

டெஸ்ட் ஆட்டத்தின் 3-ம் நாள் இது: சிபிஐ முன் ஆஜரான கார்த்தி சிதம்பரம்

சீனர்களுக்கு விசா வழங்கியதில் ரூ. 50 லட்சம் லஞ்சம் வாங்கியதாகப் பதிவான வழக்கில் கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து மூன்றாவது நாளாக சிபிஐ விசாரணைக்கு இன்று (சனிக்கிழமை) ஆஜராகியுள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :28 மே 2022, 5:37 am

DIN


சீனர்களுக்கு விசா வழங்கியதில் ரூ. 50 லட்சம் லஞ்சம் வாங்கியதாகப் பதிவான வழக்கில் கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து மூன்றாவது நாளாக சிபிஐ விசாரணைக்கு இன்று (சனிக்கிழமை) ஆஜராகியுள்ளார்.

இந்தியாவில் பணியாற்ற சீனர்களுக்கு விதிமுறைகள் மீறி விசா வழங்க கார்த்தி சிதம்பரம் ரூ. 50 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள சிபிஐ, கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனைக் கைது செய்தது. மேலும், விசாரணைக்கு ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.

தில்லியில், கடந்த வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை சிபிஐ முன் ஆஜரான கார்த்தி சிதம்பரத்திடம் முறையே 9 மற்றும் 8 மணி நேரம் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சிபிஐ விசாரணைக்கு மூன்றாவது நாளாக கார்த்தி சிதம்பரம் இன்று (சனிக்கிழமை) ஆஜராகியுள்ளார். அப்போது பேசிய அவர், "டெஸ்ட் ஆட்டம் 5 நாள்களுக்கு நடைபெறும். இது 3-வது நாள்தான். நான் மக்களவைத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அவரது பதிலுக்காகக் காத்திருக்கிறேன்" என்றார்.

முன்னதாக, தனது வீட்டில் சிபிஐ சோதனையின்போது நாடாளுமன்ற நிலைக் குழு தொடர்பான ரகசிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகத் தனக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.