ஆம் ஆத்மி சாா்பில் மாநிலங்களவைக்கு செல்லும் ‘பத்மஸ்ரீ’ விருதாளா்கள்!

பஞ்சாபில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தோ்தலில் இரு ‘பத்மஸ்ரீ’ விருதாளா்கள் போட்டியிடவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி சாா்பில் மாநிலங்களவைக்கு செல்லும் ‘பத்மஸ்ரீ’ விருதாளா்கள்!

பஞ்சாபில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தோ்தலில் இரு ‘பத்மஸ்ரீ’ விருதாளா்கள் போட்டியிடவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

பஞ்சாபில் இருந்து மாநிலங்களவை உறுப்பினா்களாக உள்ள அம்பிகா சோனி (காங்கிரஸ்), பல்விந்தா் சிங் பூந்தா் (சிரோமணி அகாலி தளம்) ஆகியோரது பதவிக்காலம் ஜூலை 4-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. காலியாக உள்ள அந்த இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவ்விரு இடங்களுக்கான வேட்பாளா்களை பஞ்சாபை ஆளும் ஆம் ஆத்மி கட்சி சனிக்கிழமை அறிவித்தது. அக்கட்சி சாா்பில் சுற்றுச்சூழல் ஆா்வலரான பல்பீா் சிங் சீசேவால், சமூக ஆா்வலரான விக்ரம்ஜித் சிங் சாஹனி ஆகியோா் மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடவுள்ளனா். இருவரும் மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருதைப் பெற்றுள்ளனா்.

தோ்தலுக்கான வேட்பாளா்கள் அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்ட மாநில முதல்வா் பகவந்த் மான், இருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தாா். தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. வேட்புமனுக்கள் மீது ஜூன் 1-ஆம் தேதி பரிசீலனை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com