இதுபோன்ற சூழ்நிலையில், “குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டமானது, கரோனாவால் தாய், தந்தை இருவரையும் இழந்து தவிக்கும் குழந்தைகளின் சிரமங்களைக் குறைக்கும் ஒரு சிறிய முயற்சியாகும். குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் என்பது ஒவ்வொரு நாட்டினரும் உங்களுடன் மிகுந்த உணர்வுடன் இருக்கிறார்கள் என்பதன் பிரதிபலிப்பாகவும் இருக்கிறது. யாருக்காவது தொழில்முறை படிப்புகள் அல்லது உயர்கல்விக்கு கல்விக் கடன் தேவைப்பட்டால், பி.எம். கேர்ஸ் அதற்கும் உதவும். இதர அன்றாட தேவைகளுக்காக, பிற திட்டங்களின் மூலம் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.4 ஆயிரம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 23 வயதை அடையும் போது ரூ.10 லட்சத்தைத் தவிர, ஆயுஷ்மான் பாரத்- பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் சுகாதார அட்டை குழந்தைகளுக்கு வழங்கப்படும். அதன் மூலம் உடல்நலக் காப்பீடும், உளவியல் மற்றும் அவர்களது ஆரோக்கியத்தை உறுதி செய்யவும், உதவிபுரிவதற்காக சம்வாத் ஹெல்ப்லைன் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படும்.