எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

3 குழந்தைகளின் தாய் மின் ஆட்டோ ஓட்டுநரானது எப்படி? ஏன்? 

தீவிரவாத அச்சுறுத்தல்கள் நிறைந்த ஜம்மு-காஷ்மீரில் 3 குழந்தைகளின் தாய் ஒருவர் முதல் மின் ஆட்டோ ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்றதன் மூலம் பாலின பகுபாட்டை முறியடித்துள்ளார்.

News image

மின் ஆட்டோ ஓட்டுநர் சீமா தேவி

Updated On :1 பிப்ரவரி 2024, 4:14 pm IST


ஸ்ரீநகர்: தீவிரவாத அச்சுறுத்தல்கள் நிறைந்த ஜம்மு-காஷ்மீரில் 3 குழந்தைகளின் தாய் ஒருவர் முதல் மின் ஆட்டோ ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்றதன் மூலம் பாலின பகுபாட்டை முறியடித்துள்ளார். 3 குழந்தைகளின் தாயான சீமா தேவி கடந்த நான்கு மாதங்களாக நக்ரோடா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் ஆட்டோ ஓட்டி கணவருக்கு ஆதரவாக இருந்து வருவதற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

40 வயதான சீமா தேவிக்கு 15 வயதில் ஒரு மகனும், 14 மற்றும் 12 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர். மூவரும் கல்வி பயின்று வருகின்றனர். பிள்ளைகளின் கல்விச் செலவு, குடும்பம் நடத்துவதற்கு போதிய வருமானம் இல்லாமல் சிரமத்தில் இருந்து வந்தனர். 

இந்நிலையில், தனது குழந்தைகளின் படிப்பிற்காகவும், கணவருக்கு உதவியாக இருப்பதற்காக சீமா தேவி பல்வேறு இடங்களில் வேலை தேடியுள்ளார். வேலை கிடைக்கவில்லை. இதனால் சீமா சோர்ந்துவிடவில்லை. விடாமுயற்சியாக வேலை தேடி வந்துள்ளார். 

இந்நிலையில், நாம் ஏன் வேலை தேட வேண்டும், நாமே வேலையை உருவாக்கிக்கொள்வோம் என முடிவுவெடுத்த சீமா, கணவருடன் ஆலோசித்து ஒரு மின் ஆட்டோ வாங்கி ஓட்டுவது என முடிவு செய்துள்ளனர். பின்னர், ஒரு மின் ஆட்டோவை வாங்கி கடந்த நான்கு மாதங்களாக ஆட்டோ ஓட்டி, கணவருக்கு ஆதரவாகவும், உதவியாகவும் குடும்பத்தை நடத்தி வருகிறார் சீமா தேவி.

இது குறித்து செய்தியாளர்களிடம் சீமா தேவி கூறியதாவது:

குடும்பச் செலவு, குழந்தைகளின் கல்விச் செலவு என குடும்பத்திற்கு பணத்தேவை அதிகமாக இருந்ததால், “எனது கணவரின் வருமானம் போதாத நிலையில் கணவருக்கு உதவியாக இருக்க விரும்பினேன். ஆனால், குடும்பத்தை நடத்துவதற்கு வேறு வேலை எதுவும் கிடைக்காமல் சோர்ந்திருந்த நிலையில், “பெண்களால் ரயில்கள், விமானங்களெல்லாம் ஓட்ட முடியும் போது, ஏன் நம்ம ஒரு மின் ஆட்டோவை வாங்கி ஓட்டக் கூடாது? என்ற கேள்வி என்னை தட்டி எழுப்பியது, ஊக்கப்படுத்தியது ”

இதையடுத்து நாம் ஒரு மின் ஆட்டோ வாங்கி ஓட்டலாம் என நானும் என் கணவரும் முடிவு செய்தோம். பின்னர், “நானும் என் கணவரும் ரூ.30,000 கடன் வாங்கி, மாதம் ரூ.3,000 மாதத் தவணையில் மின் ஆட்டோ ஒன்றை வாங்கினோம். என் கணவர் எனக்கு மின் ஆட்டோவை ஓட்டுவதற்கு கற்றுக்கொடுத்தார், நான் அதை விரைவாக கற்றுக்கொண்டேன்.” பின்னர், கடந்த நான்கு மாதங்களாக நக்ரோடா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் ஆட்டோவை ஓட்டி கண்ணியமான வாழ்க்கையையும், எங்கள் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியையும் வழங்கி வருகிறோம்”என்று அவர் கூறினார்.

பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்களால் ஈர்க்கப்பட்ட நீங்கள் ஆட்டோ ஓட்டுவதற்கு குடும்பத்தினர் ஆதரவாக இருக்கிறார்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “என் கணவர் மிகவும் ஆதரவாகவும் உதவியாகவும் இருக்கிறார்” என சீமா பதிலளித்தார் .

‘மின் ஆட்டோவில் பயணிப்பது பெண்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள்?’
பெண்கள் எனது ஆட்டோவில் பயணிப்பதில் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள் என்று சீமா கூறினார், மேலும், பெண் பிள்ளைகளை பாதுகாப்பாக பள்ளிக்கு கொண்டு விடுவதாக பலரும் நம்புகிறார்கள் என சீமா கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.