காவல்துறையினர் பெண்களை லத்தியால் அடிப்பதும், சரமாரியாக தாக்குதல் நடத்துவதுமான அத்துமீறல் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஜலால்பூர் பகுதியில் அம்பேத்கர் சிலை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து அப்பகுதியில் உள்ள மக்கள் பெருமளவில் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.
அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டக்காரர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். கலைந்துசெல்லுமாறு உத்தரவிட்டனர்.
ஆனால், காவல்துறையினருடன் பொதுமக்கள் தொடர்ந்து வாக்குவாதம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் கூட்டாக இணைந்து காவலர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனால், ஆத்திரமடைந்த காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது லத்தி தாக்குதல் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களையும் காவல்துறையினர் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


