பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சாவர்க்கர் தொடர்பாக ராகுல் கருத்து: உடன்பட மறுத்த சிவசேனை

சாவர்க்கர் தொடர்பான ராகுல்காந்தியின் கருத்துடன் தாங்கள் உடன்படவில்லை என மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :17 நவம்பர் 2022, 4:23 pm IST

சாவர்க்கர் தொடர்பான ராகுல்காந்தியின் கருத்துடன் தாங்கள் உடன்படவில்லை என மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

பாஜக அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒற்றுமை யாத்திரையில் ராகுல்காந்தி ஈடுபட்டுள்ளார். 

செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரையில் ராகுல்காந்தியுடன் பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த யாத்திரை தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா, கர்நாடகம் மாநிலங்களைக் கடந்து தற்போது மகாராஷ்டிரத்தில் நடைபெற்றுக் கொண்டுள்ளது. 

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற இந்திய ஒற்றுமை பயண பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி பாஜகவை கடுமையாக விமர்சித்தார். மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னோடி தலைவராக இருந்த சாவர்க்கர் குறித்து விமர்சித்ததுடன் அவர் ஆங்கிலேயர்களிடமிருந்து கருணைத் தொகை பெற்றதாக குற்றம்சாட்டினார். 

இந்நிலையில் ராகுல்காந்தியின் இந்த கருத்துக்கு கூட்டணி கட்சியான உத்தவ் தாக்கரே ஆதரவு சிவசேனை மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, “சாவர்க்கர் குறித்த ராகுல்காந்தியின் கருத்துக்கு நாங்கள் உடன்படவில்லை. நாங்கள் சாவர்க்கரை நேசிக்கிறோம். அவரை மதிக்கிறோம்.

அதேசமயம் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் செய்த பணி என்ன என்பதை பாஜகவினர் விளக்க வேண்டும். நாங்கள் அப்போது இல்லை. ஆனால் ஆர்எஸ்எஸ் இருந்தது. அந்த அமைப்பு சுதந்திரப் போராட்டத்தில் ஒரு பங்கையும் வகிக்கவில்லை” எனத் தெரிவித்தார். 

காங்கிரஸ் கட்சியின் ஒற்றுமை யாத்திரைக்கு உத்தவ் தாக்கரே ஆதரவு சிவசேனை கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.