நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ராகுலுடன் இணைந்த காந்தியின் கொள்ளுப்பேரன்! வரலாற்று நிகழ்வு!!

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி வெள்ளிக்கிழமை இன்று (நவ.18) இணைந்தார். 

News image

ராகுல் காந்தி - துஷார் காந்தி

Updated On :18 நவம்பர் 2022, 6:08 pm IST

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி வெள்ளிக்கிழமை இன்று (நவ.18) இணைந்தார். 

இதன் மூலம், மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு ஆகிய இருபெரும் தலைவர்களின் கொள்ளுப்பேரன்கள் இணைந்துள்ளதாக சமூல வலைதளங்களில் கருத்துக்கள் எழுந்துள்ளன. 

தலைமுறைகள் கடந்து இருபெரும் தலைவர்களின் கொள்ளுப்பேரன்கள் இணைந்து ஒன்றாகப் பேரணி சென்றது வரலாற்று நிகழ்வு என காங்கிரஸ் கட்சி தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளது. 

Story image

மக்களவைத் தேர்தலை குறிவைத்து, பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ஒற்றுமை நடைப்பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முன்னெடுத்துள்ளார்.

கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 

மகாராஷ்டிரத்தில் நவம்பர் 7ஆம் தேதி ஒற்றுமை நடைப்பயணம் தொடங்கியது. அகோலா மாவட்டத்தின் பாலாபூர் பகுதியில் இன்று (நவ.18) காலை நடைப்பயணம் மீண்டும் தொடங்கியது. 

நடைப்பயணம் தொடங்கிய சிலமணி நேரத்தில், எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளருமான துஷார் காந்தி, ஷெகான் பகுதியில் ராகுல் காந்தியின் பேரணியில் கலந்துக்கொண்டார். 

நான் பிறந்த ஊரில் இருந்து ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்துகொள்வது மகிழ்ச்சி என துஷார் காந்தி தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். 

மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு ஆகிய இருபெரும் தலைவர்களின் கொள்ளுப்பேரன்கள் ஒற்றுமைப்பயணத்தில் ஒன்றாக கலந்துகொண்டது வரலாற்று நிகழ்வு என காங்கிரஸ் கட்சி சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.