ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தெலங்கானா அரசு கல்லூரியில் ரசாயன வாயு கசிவு: 25 மாணவர்கள் பாதிப்பு

தெலங்கானாவில் அரசு கல்லூரியின் ஆய்வகத்தில் இருந்து ரசாயன வாயு கசிந்ததால் 25 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

News image
Updated On :18 நவம்பர் 2022, 3:06 pm

DIN

தெலங்கானாவில் அரசு கல்லூரியின் ஆய்வகத்தில் இருந்து ரசாயன வாயு கசிந்ததால் 25 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அரசு கஸ்தூர்பா கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் இருந்து இன்று திடீரென ரசாயன வாயு கசிந்தது. இதனால் சுமார் 25 மாணவர்களின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. 

வாயு கசிவு ஏற்பட்டத்தைத் தொடர்ந்து, கல்லூரியில் இருந்த அனைத்து மாணவர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். 

தற்போது அவர்கள் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே கல்லூரிக்கு விரைந்த தடயவியல் குழுவினர் எந்த வாயு கசிந்தது என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினரும் விசாரணையில் இறங்கியுள்ளனர். இதனால் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.