முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி தில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
'இந்தியாவின் இரும்புப் பெண்மணி' முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் இன்று(நவ.19) கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் இந்திரா காந்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, தில்லியில் சக்தி ஸ்தலாவில் உள்ள இந்திரா காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அசோக் கெலாட், பூபேந்தர் ஹூடா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இந்திரா காந்திக்கு மரியாதை செய்தனர்.
இதையும் படிக்க | நடைப்பயணத்தின் இடையே இந்திரா காந்திக்கு அஞ்சலி செலுத்திய ராகுல்!