கம்போடியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான சாம்டெக் பிச்சே சேனா டீ பான் அழைப்பின் பேரில், ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 22, 23 ஆகிய இரண்டு நாள்கள் அரசு முறை பயணமாக கம்போடியா செல்கிறார்.
ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்களின் தலைவர் என்ற முறையில், சீம் ரீப் என்னுமிடத்தில் ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்களின் 9 ஆவது ஆண்டு கூட்டத்தை கம்போடியா நடத்துகிறது. இந்தியா-ஆசியான் உறவுகளின் 30 ஆண்டுகளை குறிக்கும் வகையில், வரும் 22 ஆம் தேதி நடைபெறும் முதல் இந்தியா-ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு இந்தியாவும் கம்போடியாவும் இணைந்து தலைமை தாங்குகிறது.
இதையும் படிக்க | தில்லியைத் தொடர்ந்து மே.வங்கத்திலும் கொடூரக் கொலை
இந்தக்கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் வரும் 23 ஆம் தேதி உரையாற்றுகிறார். கம்போடியா பிரதமரையும் சந்தித்து பேசுகிறார்.
இந்த சந்திப்பின் போது இந்தியா-ஆசியான் கூட்டாண்மையை அதிகரிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் பங்கேற்கும் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் இருதரப்பு விவாதங்களை நடத்தும். பேச்சுவார்த்தையின் போது, பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் விஷயங்களை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ராஜ்நாத் சிங் விவாதிக்க உள்ளார்.