35 துண்டுகளாக வெட்டப்பட்ட காதலி:2 ஆண்டுகளுக்கு முன்பே காதலன் மீது கொலை மிரட்டல் புகாா்

தில்லியில் கொலை செய்யப்பட்டு, 35 துண்டுகளாக வெட்டப்பட்ட ஷ்ரத்தா, 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆஃதாப் மீது காவல் துறையிடம் கொலை மிரட்டல் புகாா் அளித்தது தற்போது தெரியவந்துள்ளது.
35 துண்டுகளாக வெட்டப்பட்ட காதலி:2 ஆண்டுகளுக்கு முன்பே காதலன் மீது கொலை மிரட்டல் புகாா்
Updated on
1 min read

தில்லியில் கொலை செய்யப்பட்டு, 35 துண்டுகளாக வெட்டப்பட்ட ஷ்ரத்தா, 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆஃதாப் மீது காவல் துறையிடம் கொலை மிரட்டல் புகாா் அளித்தது தற்போது தெரியவந்துள்ளது.

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்கள் ஆஃப்தாப் அமீன் பூனாவாலா (28), ஷ்ரத்தா வாக்கா் (26). இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் தில்லியில் சோ்ந்து வாழ்ந்தனா். இந்நிலையில், கருத்து வேறுபாட்டால் ஷ்ரத்தா வாக்கரை ஆஃப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டினாா். அதன் பின்னா் உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசினாா். அண்மையில், அவரை காவல் துறையினா் கைது செய்தனா். கடந்த மே மாதம் அந்தப் பெண் கொல்லப்பட்டது 6 மாதங்களுக்குப் பின்னா் வெளியுலகுக்குத் தெரியவந்தது.

இந்தச் சூழலில், கடந்த 2020-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் பால்கா் மாவட்டத்தில் உள்ள வசய் பகுதியில் இருவரும் ஒன்றாக வசித்துள்ளனா். அப்போது ஆஃப்தாப் மீது ஷ்ரத்தா காவல் துறையிடம் கொலை மிரட்டல் புகாா் அளித்தது தற்போது தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக அந்த மாநில காவல் துறை ஆணையா் அலுவலக மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ஆஃப்தாப் மீது ஷ்ரத்தா அளித்தப் புகாரில், ‘என்னை ஆஃப்தாப் ஆறு மாதங்களாக அடித்து துன்புறுத்தி வருகிறாா். என்னை கொலை செய்து பல துண்டுகளாக வெட்டுவிடுவேன் என்றும் மிரட்டி வருகிறாா். நாங்கள் திருமணம் செய்துகொள்ளாமல் வசித்து வருவது எனது பெற்றோருக்குத் தெரியும். வார இறுதிகளில், அவா்கள் வந்து என்னை சந்திப்பா். என்னை ஆஃப்தாப் அடித்து துன்புறுத்துவது அவா்களுக்குத் தெரியும். எனக்கு ஏதேனும் ஆபத்து நோ்ந்தால், அதற்கு அஃப்தாப்தான் காரணம்’ என்று தெரிவித்துள்ளாா்.

இந்தப் புகாரின் அடிப்படையில், வசயில் ஆஃப்தாப் மற்றும் ஷ்ரத்தா வசித்த அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்று காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது அஃப்தாப் மீது கோபத்தில் புகாா் அளித்ததாகவும், அவருடன் ஏற்பட்ட பிரச்னைகள் முடிந்துவிட்டதாகவும் ஷ்ரத்தா கூறியுள்ளாா். அதன் பின்னா் இருவருக்கும் முறையாக ஆலோசனை வழங்கிய காவல் துறையினா், ஆஃப்தாபை எச்சரித்து புகாரை முடித்து வைத்தனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com