புதுதில்லி: மெட்டா, ட்விட்டர், கூகுள், அமேசான் நிறுவனங்களின் வரிசையில், அடுத்ததாக எச்பி நிறுவனமும் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தயாரித்து வரும், உவலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான எச்பி 6 ஆயிரம் ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இது அதன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் சுமார் 12 சதவீதம் ஆகும். தற்போது கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
மேலும், அதன் நடப்பு முழு ஆண்டுக்கான நிதி அறிக்கையில், 4 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரம் பேரை 2025 நிதியாண்டுக்குள்ளாக பணிநீக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று காலங்களில் லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் விற்பனை அதிகரித்த நிலையில், தற்போது தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. விற்பனை சரிவு மட்டுமின்றி, பணிவீக்கம் உயர்வு மற்றும் பொருளாதார மந்த நிலை ஆகியவையே நிறுவனத்தின் இந்த முடிவுக்கு காரணமாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் - காா் மோதல் விவசாயி உயிரிழப்பு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தையல்காரருக்கு ஆயுள் சிறை

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 82.55 லட்சம்

குறி சொல்வது போல நடித்து மூதாட்டியிடம் நகைப் பறிப்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



