காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து பாஜக தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், 'பாஜக தலைவர் ஆவதற்கு ஜெ.பி. நட்டா எப்போது வேட்புமனு தாக்கல் செய்தார்? எந்த தேர்தல் அதிகாரியின் முன் வேட்புமனுவை தாக்கல் செய்தார் என்பதை அறிய முயற்சிக்கிறேன்?"
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் பொதுமக்களிடையேயும் ஊடகத்தினிடையேயும் ஆர்வத்தை உருவாகியுள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு நல்ல சகுனம்.
மக்கள் வாக்கெடுப்பு மூலமாக ஒருமனதாக பாஜக தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டதற்கு அடுத்ததாக இந்த தேர்தல் இருக்கும் என்று நினைக்கிறேன்' என்று கிண்டல் செய்துள்ளார்.