அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் 50 சதவீதம் நிறைவு: யோகி ஆதித்யநாத் தகவல்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் 50 சதவீதம் நிறைவு: யோகி ஆதித்யநாத் தகவல்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான கட்டுமானப் பணியை கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். கோவில் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.   

இந்த நிலையில் ராஜஸ்தானில் ஸ்ரீ பஞ்ச்கண்ட் பீடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 'சந்த் சமகம்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், "இந்தியாவின் சனாதன தர்மம் நமது 'கௌ மாதாக்கள்' (பசுக்கள்) பாதுகாப்பிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது" என்றார்.

"மகாத்மா ராம்சந்திர வீர் ஜி மகராஜ் மற்றும் சுவாமி ஆச்சார்யா தர்மேந்திர ஜி மகராஜ் ஆகியோர் நாட்டிற்கு தன்னலமின்றி பங்களித்தவர்கள். மக்கள் பங்களிப்பை உறுதி செய்வதில் 'பீடம்' முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் நலனுக்காக புனிதர்களின் தலைமையில் பல்வேறு பிரசாரங்கள் நடத்தப்படுகிறது. அனைத்து சமூக மற்றும் மத இயக்கங்களிலும் 'ஸ்ரீ பஞ்ச்கண்ட் பீத்' எப்போதும் முன்னணிப் பங்காற்றுகிறது. 

சுவாமி சோமேந்திர சர்மாவின் 'சதர்போஷி' விழாவின் போது, ​​ஆச்சார்யா தர்மேந்திரா மூன்று தலைமுறைகளாக கோரக்ஷபீடத்துடன் ஆழமான தொடர்பைக் கொண்டிருந்தார் என்று ஆதித்யநாத் கூறினார்.

அயோத்தியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றும் வரும் ராமர் கோவில்.

மேலும், "1949-இல் இயக்கம் தொடங்கி ராமர் கோவில் கனவை நனவாக்க அர்ப்பணிப்புடன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக, ஆச்சார்யாவின் கனவாக இருந்த அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் 50 சதவீதத்துக்கும் மேல்  நிறைவடைந்துள்ளதாகவும், பணிகள் எந்தவித தடங்கலுமின்றி வேகமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

ஆச்சார்யா ஜி தனது கருத்துக்களை வெளிப்படையாகவும் பகுத்தறிவு ரீதியாகவும் வெளிப்படுத்துவார் என்று கூறினார் யோகி ஆதித்யநாத். இதன் விளைவாக இந்து சமூகம் அவர் மீது மரியாதையும் மரியாதையும் வைத்திருக்கிறது.

"இன்று, ஆச்சார்யாவின் மதிப்புகள், லட்சியங்கள் மற்றும் பங்களிப்பு நம் அனைவரின் உயிருடன் உள்ளது," என்று அவர் கூறினார்.

கடந்த ஜூன் மாதம் ராமர் கோவிலின் 'கர்ப்ப கிரகம்' கட்டுவதற்கு அடிக்கல்லை நாட்டினார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு 2019 நவம்பர் 9 ஆம் தேதி பாபர் மசூதி இருந்த அயோத்தியில் உள்ள நிலம் ராம் லல்லாவுக்குச் சொந்தமானது என்று ஒருமனதாக வரலாற்றுரீதியான முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com