குஜராத் மாநிலத்தில் உள்ள பாஜக தொண்டர்கள் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக இருப்பதாகவும், பாஜகவின் தோல்வியினை அவர்களே எதிர்பார்ப்பதாகவும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தின் பழங்குடியினர் அதிகம் உள்ள வல்சாத் மாவட்டத்தில் பேரணியில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
இதையும் படிக்க: உத்தவ் தாக்கரேவின் புதிய சின்னம்: தேர்வு பட்டியலில் உதயசூரியன்!
அரவிந்த் கேஜரிவால் இந்து மதத்திற்கு எதிரானவர் என குஜராத்தின் பல பகுதிகளிலும் பதாகைகள் வைக்கப்பட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரவிந்த் கேஜரிவால் பேசியிப்பதாவது: “ பல பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என்னை ரகசியமாக சந்தித்து ஆளும் பாஜகவை நீங்கள் தான் வீழ்த்த வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். நான் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களே ஆம் ஆத்மிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதுதான் அது. மக்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களித்து பாஜவினை ஆட்சியிலிந்து கீழிறக்க வேண்டும்.” என்றார்.