தில்லியில் அனைத்து மாநில பாஜக பொதுச் செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளதையொட்டி தேசிய கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
மத்தியில் ஆளும் பாஜக அடுத்த ஆண்டும் ஆட்சியைப் பிடிக்க வியூகம் வகுத்து அக்கட்சியின் தலைவர்கள் பல்வேறு மாநிலங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, அனைத்து மாநில பொதுச் செயலாளர்களுடன் தில்லியில் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
இதையும் படிக்க | தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டுமா? 3 முக்கிய வழிகள் இதோ..!