இந்தியாவில் முதல்முறையாக ஹிந்தி மொழியில் மருத்துவக் கல்வியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடக்கிவைக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ஹிந்தியில் மருத்துவப் படிப்புக்கான முதலாமாண்டு புத்தகங்களை அமித் ஷா இன்று வெளியிடுகிறார்.
இந்தியாவிலேயே ஹிந்தி மொழியில் மருத்துவக் கல்வியை பயிலும் வகையில் மத்திய பிரதேசத்தில்தான் முதல்முறையாக தொடங்கப்பட உள்ளது.
இது ஹிந்தி மொழி தெரிந்தவர்கள் தாய்மொழி மூலமாக மருத்துவம் படித்து முன்னேற வாய்ப்பாக இருக்கும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.