இந்திய ரயில்வேக்கு ஸ்கிராப் விற்பனை மூலம் ரூ.2,500 கோடிக்கு மேல் வருவாய்!

இந்திய ரயில்வேக்கு ஸ்கிராப் விற்பனை மூலம் ரூ. 2,500 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
இந்திய ரயில்வேக்கு ஸ்கிராப் விற்பனை மூலம் ரூ.2,500 கோடிக்கு மேல் வருவாய்!

 
இந்திய ரயில்வேக்கு ஸ்கிராப் விற்பனை மூலம் ரூ. 2,500 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்திய ரயில்வே இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் ஸ்கிராப் விற்பனை மூலம் ரூ.2,500 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தை விட ரயில்வே 28 சதவீதம் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும், 2022-23 ஆம் ஆண்டில் ஸ்கிராப் விற்பனை மூலம் ரூ.4,400 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஸ்கிராப் பொருட்களை திரட்டி, மின்-ஏலம் மூலம் விற்பனை செய்வதன் மூலம் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்த ரயில்வே அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com