புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

இந்திய ரயில்வேக்கு ஸ்கிராப் விற்பனை மூலம் ரூ.2,500 கோடிக்கு மேல் வருவாய்!

இந்திய ரயில்வேக்கு ஸ்கிராப் விற்பனை மூலம் ரூ. 2,500 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :17 அக்டோபர் 2022, 10:44 am

DIN

 
இந்திய ரயில்வேக்கு ஸ்கிராப் விற்பனை மூலம் ரூ. 2,500 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்திய ரயில்வே இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் ஸ்கிராப் விற்பனை மூலம் ரூ.2,500 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தை விட ரயில்வே 28 சதவீதம் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மேலும், 2022-23 ஆம் ஆண்டில் ஸ்கிராப் விற்பனை மூலம் ரூ.4,400 கோடி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஸ்கிராப் பொருட்களை திரட்டி, மின்-ஏலம் மூலம் விற்பனை செய்வதன் மூலம் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்த ரயில்வே அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.