
ஜோதிராதித்ய சிந்தியா (கோப்புப் படம்)
தில்லி, பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரி (வாட் வரி) குறைக்க வேண்டும் என விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சார்பில், விமான போக்குவரத்துத் துறையில் 2 நாள்கள் மாநாடு நடைபெற்றது.
படிக்க | கல்வி கட்டணம் கட்டாததால்... மாணவர்களை தண்டித்த தனியார் பள்ளி!
இதில், விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், அசாம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தில்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், பிகார், பஞ்சாப் ஆகிய மாநில அரசுகள் விமான எரிபொருள் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும். தங்கள் மாநிலங்களில் விமான போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்காக இதனை மாநில அரசுகள் செய்ய வேண்டும்.
விமான எரிபொருள் மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைக்க வேண்டும் என்பதை பண்போடு தெரிவித்துக்கொள்கிறேன். தங்கள் மாநிலங்களில் விமான போக்குவரத்து வசதியை அதிகரிக்கப்படும் என உறுதி அளிக்கிறேன்.
படிக்க | உத்தரகண்ட் ஹெலிகாப்டர் விபத்து: பலி 7 ஆக உயர்வு! 3 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்...
இந்த பிரச்னை தொடர்பாக ஏற்கெனவே மதிப்புக் கூட்டு வரியை குறைத்த 12 மாநிலங்களில் விமான போக்குவரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை குறைவாக உள்ள மாநிலங்களுக்கு மட்டுமே அதிக விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமான போக்குவரத்துத் துறையில் 40 - 45 சதவிகிதம் வருவாய் எரிபொருள் பயன்பாட்டிற்கு செலவாகிறது எனக் குறிப்பிட்டார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...