காங்கிரஸ் தலைவர் யார்? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ளது. 
காங்கிரஸ் தலைவர் யார்? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியுள்ளது. 

காங்கிரஸ் தலைவா் பதவிக்கு கடந்த திங்கள்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதில் மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, சசி தரூா் ஆகிய இருவரும் களம் கண்டனா். மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் 9,915 போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 9,500-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகின. நாடு முழுவதும் 68 இடங்களில், ரகசிய வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 96% வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் சீலிடப்பட்டு, தில்லியில் உள்ள கட்சி தலைமையகத்துக்கு கொண்டுவரப்பட்டன.

இதையடுத்து இன்று(புதன்கிழமை) காலை 11 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தில்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. 

மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு மூத்த தலைவா்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருந்ததால், அவருக்கே வெற்றிவாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. 22 ஆண்டுகளுக்கு பிறகு சோனியா காந்தி குடும்பத்தைச் சாராதவா் கட்சித் தலைவராகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com